வியாழன், 16 செப்டம்பர், 2021

கறங்கு வெள்ளருவி.....

 கறங்கு வெள்ளருவி

__________________________________கல்லிடைக்கீரன்.

(ஓலைத்துடிப்புகள் 111)


கறங்கு வெள்ளருவி கடிமிசை ஆங்கு

களிமென் குரல் படர் தூஉய் தரும்

முரல் மன்றின் பால் திறந்தன்ன‌

கழங்கு ஆடு ஆயம் விளி கிளர் ஓசை

இணர் அவிழ் வீக்களின் இமிழ்தரூஉம்

சிறைமணம் உகந்து அவள் சில்பூ நகையில்

சிறைப்படூஉம் இன்பில் என்பும் கிளத்த

புல்லெனும் சொல்லில் அன்பே என்னும்

அதிர் ஒலி யாழ ஆழி வீழ்ந்தனன்.

எவன் கொல் ஈனும் இக்கதிர் பரி மண்டிலம்.

மண்டை சிதறிய வெண்சோற்றுப் பரலென‌

மண்டிய வான்பூ இனநிரை கொளீஇ

சொல்லின் கீரன் கீறிய சொல் தொறும்

மணிநிறம் அவிழ்க்கும் அணிதிறம் விரிக்கும்.

முருகின் சுள்ளிய வெறியாட்டு அயரும்

நெஞ்சில் வேர்த்து நெருநல் ஊழ்த்து

அவளின் அவிர்சொல் ஓங்கல் தெறித்தன்ன‌

படுகதிர் இரட்டும் ஒலிபு ஊண் ஊட்டும்.

அன்பின் உருகெழு ஓண்கூர் தீட்டி

ஒற்றித்தருகென மைவிழி காட்டும்

யானும் ஒற்றுவன் நயவர நோக்கி.

வெள்ளாறு நீண்டு பொரி படர ஏகும்

நிரம்பா நீளிடை நிழல் சூன்று உண்ணும்

இனிய பாழில் ஊர்ந்தனம் மன்னே.


____________________________________________


தலைவியின் காதல் நிறைந்த சொல்லும்

அன்பு கூர்ந்த விழியும் தலைவனை

காதலின் அடி ஆழத்து ஒரு ஆழிக்குள்

வீழ்த்துகிறது.பாலையின் வெறுமைத்தீயும்

அவனுள் ஒரு தண்ணிய நிழலே ஆகும்.

இக்கருத்தில் நான் எழுதிய சங்கநடைச்

செய்யுள் கவிதை இது

_____________________கல்லிடைக்கீரன்


புதன், 15 செப்டம்பர், 2021

"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச்சிலம்பு"

 "ஏ கல் அடுக்கத்து இருள் அளைச்சிலம்பு"

_______________________________________கல்லிடைக்கீரன்

(ஓலைத்துடிப்புகள் 109)


ஏ கல் அடுக்கத்து இருள் அளைச்சிலம்பு

உறையும் உழுவை துஞ்சுதல் அறியா

அடர் சுரம் நுழைஇ ஆறுபடுகடாம்

அஞ்சுதல் அறியா நீளிலை எஃகமொடு

நீள வைகும் கணைக்கால் கழல‌

இலஞ்சி பழனச் செந்நிலக் குன்றன்

அடுபரல் முரலும் கொடு இடைக் கழிய‌

துடியென இசையும் நெஞ்சொடுக் கிளந்து

கல்லென ஒலிக்கும் கொல்வனத்து ஆரிடை

பயிற்றும் சொல்லே அவள் பேர் சாற்றும்.

இறைய நீட்டும் வளையின் வளையின்

இன்னொலி உய்க்கும் பல்பாற்பட்ட‌

கான்பேராறு கவி இருள் புகுந்துழி

சுரும்பின் நுண்சிறை அதிர வாங்கு

வான்பூச் சினை இடற நோக்கும்.

இறைய நீட்டும் வளையின் வளையின்

இன்னொலி எறியும் மைவிழி தேடி

கலிக்கும் ஒலிமென் கூந்தல் அடர்த்த‌

ஊழி நீள்க்கும் கானாறு தேய்க்கும்

கழி நெடில் அத்தம் இனிதுடன் நந்தும்.


_____________________________________________

அகம் 52..நொச்சி நியமங்கிழார் பாட்டின் 5 ஆம்  வரியை

முதல் வரி ஆக்கி நான் எழுதிய சங்கநடைச்செய்யுள் இது

_____________________________________கல்லிடைக்கீரன்

பேஎய் செஞ்சிவப்பின் நீள் வரி போர்த்து.

பேஎய் செஞ்சிவப்பின் நீள் வரி போர்த்து.

_______________________________________கல்லிடைக்கீரன்

(ஓலைத்துடிப்புகள் 110)



காழ்த்த நெடுங்கால் தண்பறைக் குருகின்

களிதுள் கயல்ஆரும் நளிகடல் சேர்ப்ப!

எக்கர் ஞாழல பாசிலை அடைகரை

வதிநிழல் ஓமை பொருந்தாக் காணிய‌

நெய்தலங் கானல் கண்டிசின் பெரும.

மாழை வரிவிழி நுதல் அளை நோக்கில்

ஆகம் அணியிழை சேக்கும் காதலின்

கறை உழற்றன்ன கொடு எழில் பூப்ப‌

புன்கு அவிழ் பொரிப்பூ படர்ந்த நகையில்

அவள் ஆங்கு சுழித்த நாணில் வீழ்தரு நின்

நாணில் நீர்மை கண்டுநனி நெடுவான்

வெட்கும் ஒட்கும் எல் களைந்து எல்லின்

பேஎய் செஞ்சிவப்பின் நீள் வரி போர்த்து.


_________________________________________

காதல் செழித்த தலைவியையும் மறந்து

பரத்தமையின் பால் காமுறும் தலைவனுக்கு

தோழி அறிவுறுத்தியதே இப்பாடல்.புன்கை மரம்

பூத்துச்சொரிந்தது "பொரி" படர்ந்தாற்போல்

இருக்கும் அந்த பரத்தையின் நாணமற்ற‌

சிரிப்பில் தலைவன் விழ்ந்தது அதை விட ஒரு

நாணமற்ற செயல் என தோழி இடித்துக்காட்டுகிறாள்.

அதையே இங்கு என் சங்கநடைச்செய்யுள் கவிதையாக்கி

இங்கு எழுதியிருக்கிறேன்.

______________________________கல்லிடைக்கீரன்





புதன், 1 செப்டம்பர், 2021

தீப்பொறி பூத்த இருள் காடு அன்ன‌

 தீப்பொறி பூத்த இருள் காடு அன்ன‌

__________________________________________கல்லிடைக்கீரன்

ஓலைத்துடிப்புகள் 108



வாங்கு அமை ஓமையுடன் உரசியக்கால்

தீப்பொறி பூத்த இருள் காடு அன்ன‌

தோன்றா நின்றாள் குவ‌ளையுண் கண்ணாள்

பழுனிய தேறல் தூவும் காற்றிடை

மன்றல் கொண்ட மணித்திரள் குன்றன்

பணைத்தோள் திண்ணன் பார்வை உள்ளி.

மீட்டும் ஒரு கால் தோன்றா நின்றாள்

இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் அன்ன‌

உள்ளே நீறும் தீங்கனிப் பாகர் அழலின்

ஒத்த மெய்ப்பாடு வானம் தோய் சிமையம்

உலகே பார்த்து நாணிய‌ வைத்ததென்னே

கலிமா நெடுந்தேர் செலீஇய வைத்த‌

கார் அறிவாளன் மழை செய்து தந்தான்.

படுமணி இரட்ட ஒலி கேட்டு அவளும்

உள்ளுள் மற்றோர் களிதேர் உருட்டினள்

மண்ணும் விண்ணும் மண்ணிய போல‌

தண்டுளி அருவி இழைந்தனள் மன்னே!

____________________________________________

இது நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை

..........கல்லிடைக்கீரன்

_______________________________________________